Breaking News

இந்தியாவிற்கு மாலத்தீவு எச்சரிக்கை


இந்தியாவிற்கு மாலத்தீவு எச்சரிக்கை

இந்திய இராணுவ தலையீட்டில் ஈடுபட்டால்  அது  இருதரப்பு உறவுகளை மோசமாக பாதிக்கும் என்று மாலத்தீவு பாதுகாப்பு மந்திரி ஆடம் ஷரீஃப் உமர் எச்சரித்துள்ளார்.

புதன் கிழமை ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்த உமர் இராணுவத் தலையீடு பற்றி கூறினார்.  " மாலத்தீவு மக்கள் தங்கள் அண்டை மேல் வைத்துள்ள மரியாதை அல்லது இந்தியர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை பாதிப்படையும்.மாலத்தீவிற்கு வரும் இந்தியாவின் முதலீடுகள் பாதிப்படையும்.இந்திய தொழிலதிபர்கள் மாலத்தீவிற்கு வருவதில் பிரச்சனை ஏற்படும்" என எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மொகமது நஷீட் மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பலமுறை இராணுவம் தலையிடுமாறு இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதிபர் அப்துல்லா யமீன்  ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்தார்.இதை உச்சநீதிமன்றம் தடை செய்ததோடு அவர்களை வெளியிட ஆணையிட்டது.இந்த  நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தார் யமீன்.இதை தொடர்ந்து பல குழப்பங்கள் நீடித்து வருகின்றது.

இராணுவ நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த பின்னர் இவ்வாறு ஒரு சுதந்திய நாட்டை இராணுவம் கொண்டு தாக்குவது அச்சுறுத்தல் எனவும் கூறியுள்ளார்.இந்தியாவுடன் மாலத்தீவு இதற்கு முன்னால் இருந்த மகிழ்சியான உறவில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியா இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது என கூறிய அவர் மாலத்தீவின் எந்த அரசு அதிகாரியும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை கோரவில்லை என கூறினார்.மேலும் வெளிநாட்டு இராணுவ ஊடுருவல் பற்றிய அச்சம் மாலத்தீவிற்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.



The “rather rude” snub by the Maldives Defence Ministry, as an Indian security establishment official termed it, “will not be easily digested.”

இந்தியாவும் மாலத்தீவும் 2009ல் பாதுகாப்பு தொடர்பாக இயுதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.மேலும் பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் நெருக்கான உறவில் இருந்தன.இந்தியக் கடற்படை கப்பல்கள் எப்போதும் மாலத்தீவு கடற்பகுதியில் ரோந்து செலலும். டோர்னியர் விமானங்கள் அடிக்கடி பறப்பதும் உண்டு.மேலும் மாலத்தீவின் தேசியப் பாதுகாப்பு படை தலைவர் மேஜர் ஜெனரல் அகமதள சியாம் நமது டெல்லி  பாதுகாப்பு கல்லூரியில் பயின்றவர்.

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பரேடு நிகழ்ச்சிக்காக 2014ல் சிறப்பு விருந்தினராக பணியாற்றியவர்.


கருத்துகள் இல்லை