Breaking News

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்பட விரும்பவில்லை: முன்னாள் மாலத்தீவு ஜனாதிபதி நஷீத்


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்பட விரும்பவில்லை: முன்னாள் மாலத்தீவு ஜனாதிபதி நஷீத்

மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சனிக்கிழமையன்று அவசரநிலையில் உள்ள தனது நாட்டால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனையும் விரும்பவில்லை என்று  தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்தியாவையும் சீனாவையும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போராட விரும்பவில்லை ," என்று "தி ஹிந்து" பத்திரிக்கை உரையாடலில் அவர் கூறினார்.

மாலத்தீவில் எந்தவொரு இராணுவத் தலையீடும் சீனா எதிர்த்து வருகிறது.அத்தகைய நடவடிக்கை நிலவரத்தை மேலும் சிக்கலாக்கும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் உதவியை நாஷீத் விரும்பிய ஒரு நாளுக்கு அடுத்தபடியாக இந்த தவகலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்பது பேரை விடுவிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தற்போதயை தலைவர் போர்க்கொடி தூக்கியது முதல் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவு சீனாவுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும்  ஆனால் அது "நாட்டின் வகை"  மற்றும் ஜனநாயக மேற்பார்வை போன்ற மற்ற விஷயங்களை மாற்ற முயற்சிக்க கூடாது என கூறியுள்ளார்.

நசீத் தற்போது இலங்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை