Breaking News

பாக். துறைமுகம், படைத்தளங்களில் சீன ராணுவம் குவிப்பு – சீனாவுக்கு பதிலடி தர அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர்ப்பயிற்சி


பாக். துறைமுகம், படைத்தளங்களில் சீன ராணுவம் குவிப்பு – சீனாவுக்கு பதிலடி தர அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர்ப்பயிற்சி

பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் தனது படைகளைக் குவித்து, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சீனக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்திய கடற்படையினர் அரபிக் கடலில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியப் பெருங்கடல் வழியாக எல்லைத்தாண்டி அத்துமீறிச் செல்வதை இந்திய கடற்படையினர் கண்காணித்து வருகின்றனர்.

40க்கும் மேற்பட்ட இந்தியப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் அணிவகுத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகளுடன் கடல்பகுதியில் போர்ப்பயிற்சி மேற்கொள்ள இந்தியா பச்சைக் கொடி காட்டியுள்ளது.




கருத்துகள் இல்லை