Breaking News

வீட்டின் மாடியில் விமானம் தயாரித்தவருக்கு 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது மகாராஷ்டிர அரசு – ரூ.35,000 கோடி ஒப்பந்தத்திலும் கையெழுத்து


வீட்டின் மாடியில் விமானம் தயாரித்தவருக்கு 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது மகாராஷ்டிர அரசு – ரூ.35,000 கோடி ஒப்பந்தத்திலும் கையெழுத்து

மும்பையில் வீட்டின் மாடியில் வைத்து விமானத்தை வடிவமைத்த அமோல் யாதவ் என்பவருக்கு 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்த மஹாராஷ்டிரா மாநில அரசு, அவருடன் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இருந்த அமோல் யாதவ் என்பவர், அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, 6 பேர் அமரும் வகையிலான புதிய விமானம் ஒன்றை தனது வீட்டின் மாடியிலேயே தயாரித்தார்.

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு விமானத்திற்கு சான்று பெற்றதை அடுத்து, அவர் புதிய விமான தயாரிப்பு ஆலையை அமைக்க 157 ஏக்கர் நிலத்தை மஹாராஷ்டிரா மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அத்துடன், அமோல் யாதவின் த்ரஸ்ட் ஏர்கிராஃப்ட் (Thrust Aircraft) நிறுவனத்துடன் இணைந்து புதிய விமான தயாரிப்பு திட்டத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தமும் செய்துள்ளது. இன்னும் 6 மாதங்களில் விமான தயாரிப்பு ஆலை செயல்படத் தொடங்கும் என்றும், ஆலை தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அமோல் யாதவ் தெரிவித்துள்ளார்.

Credit:Polimer


கருத்துகள் இல்லை