Breaking News

இந்திய எல்லை அருகே வந்த பாகிஸ்தான் வானூர்தி


இந்திய எல்லை அருகே வந்த பாகிஸ்தான் வானூர்தி

இந்திய பாகிஸ்தான் எல்லையான பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கோடுக்கு மிக அருகே பாக் வானூர்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூஞ்ச் எல்லைப் பகுதிக்கு வெறும் 300மீ அருகே இந்த வானூர்தி தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானூர்திகள் எல்லைக்கோடு பகுதிக்கு 1கிமீ தொலைக்கு உள்ளே வரக்கூடாது என இருநாடுகளிடையே ஒப்பந்தம் உள்ளது.இந்நிலையில் இந்த சம்பவம் ஒப்பந்த மீறலை காட்டுகிறது.

300மீ தொலைவு அருகே வந்த பிறகு அந்த வானூர்தி திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் தற்போது இல்லை.

இரண்டு முறை இந்த சம்பவம் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.காலை 9-10மணி மற்றும் மதியம் 1:30 மணி என இருமுறை மீறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பேட் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற அதே இடத்திற்கு மேல் பறந்து வந்துள்ளது சந்தேகத்தை வரவழைத்துள்ளது.


கருத்துகள் இல்லை